Tuesday, December 16, 2014

காத்திருக்கிறேன் அன்பே...

அன்பே...
உன்
பிரிவின் சோகத்தில்
என்
விழிகள் எழுதிய துயரம்தான்
இந்த
ஒளிவிடும் கண்ணீர்...

கண்ணே...
உன்
அகவரிகளைத் தேடியலையும்
என் மனம்
நீ
வந்து போன இடங்களில்
உன்
தடயங்களைச் சேகரிக்கும்...

அமுதே...
உன்னுடைய
உதயத்திற்காய்
தவமிருக்கும்
என் மனம்
எனக்கான
கிழக்கை நோக்கிக்
காத்திருக்கும்...

சூரியனையே
சூன்யமாக்கும்
உன்
தரிசனத்திற்காய்
உள்ளம்
ஒரு கோடி கண்கள் கோரி
ஆர்ப்பரிக்கும்...

உனக்காக
இன்று
என்
விழிகள் எழுதிய துயரம்தான்
அன்பே
இந்த
என் ஒளிவிடும் கண்ணீர் !

Sunday, November 30, 2014

இயேசுவைப் போற்றுவோம்!


இயேசுவைத் தேடிடு மனமே
அவரே நம் தெய்வம்
பாசத்தைப் பொழிந்திடும் நேசர்
பவத்தைக் கழுவிடும் அவர் இரத்தம்

நமக்காகவே...
நமக்காகவே...
பாவத்தைச் சுமந்தாரே....
நமக்காகவே...
நமக்காகவே...
சிலுவையில்  மரித்தாரே...        2          

                                                                  -  இயேசுவைத்.....

இரவும் பகலும் ஜெபித்தாரே
உலகத்தில்  மரணத்தை  ஜெயித்தாரே..... (2)

என் தேவனே...
என் ராஜனே...
எந்நாளும்  என்னன்பை
என்னுள்ளம்  நாடுமே...                                
                                                                             -  இயேசுவை...


வேதனையும்  பாடுகளும்
அவர் பட்டதும் நமக்காகவே...
சாட்டையடி  ஈட்டிக்குத்தும்
அவர் பட்டதும்  நமக்காகவே...     (2)

பாவத்தில் வீழ்ந்தோம் நமை மீட்டார்...  -நம்
பாவத்தினால்  அவமானப்பட்டார்        (2)

தலையில்  முள்முடி  அலங்காரமா...?    
தலையில் முள்முடி  அலங்காரமா ...?    - தேவன்
சிந்திய  இரத்தம்  வீனாகுமா...?  

                                                                                        - இயேசுவைத்...

இதயத்தில்  இயேசுவைத்  தேக்கிடுவோம்   - நம்மை
இரட்சித்த  தேவனைப் போற்றிடுவோம்  (2)

வேதத்தை  எடுத்தே  நடந்திடுவோம்  - நம்
இயேசுவே  தேவனென்று  முழங்கிடுவோம்  (2)

உலகத்திலே ...
வாழும் வரை...
அவர்  நாமம்  போற்றியே
திருநாமம்  தொழுவோம்...
                                                                                          - இயேசுவைத்...

- கவிஞர்  ஜெகவீரபாண்டியன்.








Thursday, November 27, 2014

காற்றே...
என்னைக்
கடந்து போகிறாயா...? போ... போ...
தயவுசெய்து
என்மீது நடந்து போகாதே...
நான்
ஏற்கனவே நொந்துபோயிருக்கிறேன் !

கண்ணே...
நீ
தென்றலாக வரவேண்டாமடி
தீயாக வந்து
சுட்டுவிட்டாவது போ...
தொட்டுப் பார்த்தாவது
ஆறுதலடைகிறேன் !

     000000000

ஆம்....
அவள் கைகளைத்தான்
கழுவிக்கொண்டிருக்கிறாள்....
கைகளைக்
கழுவிவிட்டு வந்தா
கட்டியணைக்கப்போகிறாள்
என்னைக்
கைகழுவிவிட்ட பிறகு ?

      0000
கண்மணியே  நானின்னும்  சாக  வில்லை
   காய்ந்திட்ட  சருகாக  இருக்கின்  றேனே
உன்னினைவில்  எரிகின்றேன்  எண்ணெய்  தீர்ந்தால்
   ஒளியிழந்த  விளக்காவேன்  அணைந்தே  போவேன்
என்நினைவோ  உனக்கிருந்தால்  உயிரே  என்னை
   எடுத்தே நீ   அணைத்துக்கொள் ; இல்லை  என்றால்
தன்னுடலை  இழந்திட்ட   உயிராய்   ஆவேன்
   தளிர்கொடியே...  எனையிழப்பாய்   உண்மை !  உண்மை !

அவளில்லா  இடமெனக்கோ  சோகக்  காடே
   அவளின்றி   போனாலோ  வேகும்  கூடே
அவளின்றி  என் கிழக்கில்  உதயம்  உண்டோ
   அவளின்றி  என் வாழ்க்கை  உயிர்பெ  றாதே..
சவமென்றே  கிடப்பதற்கா  இந்த  வாழ்க்கை
   சாரமற்ற  உப்பினை யார்  மதிக்கக்  கூடும்
அவளின்றி  எனக்கிங்கே  எதுவும்  இல்லை
   அவளுடனே  வாழ்வதொன்றே  என்றும்  இன்பம் !

தேடிவந்தேன்  குலமகளைக்  காண   வில்லை
   தேவமகள்  போனவழி   தெரிய  வில்லை
நாடிவந்தேன்  அவளன்பும்  கிட்ட  வில்லை
   நல்லதென்றே  எனக்குமிங்கே எதுவும்  இல்லை
கூடிழந்தே  கூவுகின்ற  பறவை  யானேன்
   கொடுந்துன்பம்  எனைத்தின்னும் கொடுமை கண்டேன்
நாடிழந்த   ஈழமக்கள்  துன்பம்  கண்டார்
   நானிங்கே  காண்பதுவோ  பிரிவின்  துன்பம் !


Saturday, September 20, 2014

புகழ்முடி தமிழேந்த வாழ்கிறாய்

வன்னியில் விளையாடி தந்தை சென்னியை அணைத்தாடி 
வளர்ந்தனை செல்வ மகனே… – உந்தன்
பொன்னுடல் தரைசாய புகழ்முடி தமிழேந்த வாழ்கிறாய் 
மன்னவன் ஈன்ற மகனே…

தென்னவர் புகழ்பாட தேன்தமிழ் உறவாட உதித்திடும் தமிழீழமே – அன்று
சின்னவர் பெரியவர் அனைவரின் விழியாட  
உருவாகும் சிலையொன்று உனக்காகவே ! தம்பி உனக்காகவே !


 (மாவீரன் பிரபாகரனின் புதல்வனுக்கய் தீட்டிய கவிதை)

Thursday, September 18, 2014

சோர்ந்து விடாதே...  நீயும்  சோர்ந்து  விடாதே...



துன்பம்  இன்று   வந்த  தென்றே

   சோர்ந்து  விடாதே

துணைக்கு  ஆளைச்  சேர்த்துக்  கொண்டே

    ஓடி விடாதே

அன்பு  பாசம்  அத்த னையும்

      இழந்து விட்டாலும்

அடுத்து  வரும்  வெற்றி  உன்னை

       அணைத்துக்  கொள்ளுமே !

   


Sunday, September 20, 2009

காதல் கவிதைகள்

நீ
தலை தாழ்த்தி
நடக்கும்
ஒவ்வொரு
அழகான பொழுதுகளிலும்
என் காதல்
தலை நிமிர்கிறது பெண்ணே ...!

* * *

அன்பே ...
அசையாதே...! நகராதே...!
உன் பாதங்களின் கீழ்...
உன் பதங்களின் கீழ்...
என்
உயிரின் நிழல்...!

* * *

எரியும் மிளகுவர்த்தியே ...
விட்டில் நான்
உன்னைச்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
உன்னில்
தற்கொலை செய்துகொள்ள அல்ல
உன்னில் எரியும் தீயை
அணைப்பதற்காக ...!

* * *

என் காதலைக்
கழற்றி எறிந்துவிட்டு
நீ
கண்ணயர முடியாது
அது வெறும்
கனவல்ல பெண்ணே ...
கண்...!

* * *

வெயிலின்
உஷ்ணம் தாங்காது
பசுமையின்
நிழல் நாடி
கரையை உடைத்துக்கொண்டு
நிலத்தில் பாய்கின்ற
கடல்போல்
தனிமையின்
கொடுமை தாங்காது
காதல்
நிழல் நாடி
உன்
அழகுப் பிரதேசத்தில்
பாய்கிறது
ஆசை வெள்ளம்...!

* * *

நீ
நீராடப் போனயா
அல்லது
காதல்
நெருப்பிடப் போனயா ?
ஒ... வெனக் கத்துகின்றனவே
கடலலைகள்...!

* * *

அழகானவளே...
நீ
உன்னை
அழகு படுத்திக்கொள்ளும்
ஒவ்வொரு
ஒப்பனை நாளிலும்
என் மனம்
அலங்கொலமாகிடுதே...!

* * *
மலரைப் படிக்கவந்த
வண்டாக
நான்
உன்னைப் படிக்க வந்தேன்
அந்தோ ...
ஒட்டிக்கொண்டேனே
உன்
காதல் பசையில்...!

* * *

Saturday, September 19, 2009