Sunday, November 30, 2014

இயேசுவைப் போற்றுவோம்!


இயேசுவைத் தேடிடு மனமே
அவரே நம் தெய்வம்
பாசத்தைப் பொழிந்திடும் நேசர்
பவத்தைக் கழுவிடும் அவர் இரத்தம்

நமக்காகவே...
நமக்காகவே...
பாவத்தைச் சுமந்தாரே....
நமக்காகவே...
நமக்காகவே...
சிலுவையில்  மரித்தாரே...        2          

                                                                  -  இயேசுவைத்.....

இரவும் பகலும் ஜெபித்தாரே
உலகத்தில்  மரணத்தை  ஜெயித்தாரே..... (2)

என் தேவனே...
என் ராஜனே...
எந்நாளும்  என்னன்பை
என்னுள்ளம்  நாடுமே...                                
                                                                             -  இயேசுவை...


வேதனையும்  பாடுகளும்
அவர் பட்டதும் நமக்காகவே...
சாட்டையடி  ஈட்டிக்குத்தும்
அவர் பட்டதும்  நமக்காகவே...     (2)

பாவத்தில் வீழ்ந்தோம் நமை மீட்டார்...  -நம்
பாவத்தினால்  அவமானப்பட்டார்        (2)

தலையில்  முள்முடி  அலங்காரமா...?    
தலையில் முள்முடி  அலங்காரமா ...?    - தேவன்
சிந்திய  இரத்தம்  வீனாகுமா...?  

                                                                                        - இயேசுவைத்...

இதயத்தில்  இயேசுவைத்  தேக்கிடுவோம்   - நம்மை
இரட்சித்த  தேவனைப் போற்றிடுவோம்  (2)

வேதத்தை  எடுத்தே  நடந்திடுவோம்  - நம்
இயேசுவே  தேவனென்று  முழங்கிடுவோம்  (2)

உலகத்திலே ...
வாழும் வரை...
அவர்  நாமம்  போற்றியே
திருநாமம்  தொழுவோம்...
                                                                                          - இயேசுவைத்...

- கவிஞர்  ஜெகவீரபாண்டியன்.








No comments:

Post a Comment