இயேசுவைத் தேடிடு மனமே
அவரே நம் தெய்வம்
பாசத்தைப் பொழிந்திடும் நேசர்
பவத்தைக் கழுவிடும் அவர் இரத்தம்
நமக்காகவே...
நமக்காகவே...
பாவத்தைச் சுமந்தாரே....
நமக்காகவே...
நமக்காகவே...
சிலுவையில் மரித்தாரே... 2
- இயேசுவைத்.....
இரவும் பகலும் ஜெபித்தாரே
உலகத்தில் மரணத்தை ஜெயித்தாரே..... (2)
என் தேவனே...
என் ராஜனே...
எந்நாளும் என்னன்பை
என்னுள்ளம் நாடுமே...
- இயேசுவை...
வேதனையும் பாடுகளும்
அவர் பட்டதும் நமக்காகவே...
சாட்டையடி ஈட்டிக்குத்தும்
அவர் பட்டதும் நமக்காகவே... (2)
பாவத்தில் வீழ்ந்தோம் நமை மீட்டார்... -நம்
பாவத்தினால் அவமானப்பட்டார் (2)
தலையில் முள்முடி அலங்காரமா...?
தலையில் முள்முடி அலங்காரமா ...? - தேவன்
சிந்திய இரத்தம் வீனாகுமா...?
- இயேசுவைத்...
இதயத்தில் இயேசுவைத் தேக்கிடுவோம் - நம்மை
இரட்சித்த தேவனைப் போற்றிடுவோம் (2)
வேதத்தை எடுத்தே நடந்திடுவோம் - நம்
இயேசுவே தேவனென்று முழங்கிடுவோம் (2)
உலகத்திலே ...
வாழும் வரை...
அவர் நாமம் போற்றியே
திருநாமம் தொழுவோம்...
- இயேசுவைத்...
- கவிஞர் ஜெகவீரபாண்டியன்.