நீ
தலை தாழ்த்தி
நடக்கும்
ஒவ்வொரு
அழகான பொழுதுகளிலும்
என் காதல்
தலை நிமிர்கிறது பெண்ணே ...!
* * *
அன்பே ...
அசையாதே...! நகராதே...!
உன் பாதங்களின் கீழ்...
உன் பதங்களின் கீழ்...
என்
உயிரின் நிழல்...!
* * *
எரியும் மிளகுவர்த்தியே ...
விட்டில் நான்
உன்னைச்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
உன்னில்
தற்கொலை செய்துகொள்ள அல்ல
உன்னில் எரியும் தீயை
அணைப்பதற்காக ...!
* * *
என் காதலைக்
கழற்றி எறிந்துவிட்டு
நீ
கண்ணயர முடியாது
அது வெறும்
கனவல்ல பெண்ணே ...
கண்...!
* * *
வெயிலின்
உஷ்ணம் தாங்காது
பசுமையின்
நிழல் நாடி
கரையை உடைத்துக்கொண்டு
நிலத்தில் பாய்கின்ற
கடல்போல்
தனிமையின்
கொடுமை தாங்காது
காதல்
நிழல் நாடி
உன்
அழகுப் பிரதேசத்தில்
பாய்கிறது
ஆசை வெள்ளம்...!
* * *
நீ
நீராடப் போனயா
அல்லது
காதல்
நெருப்பிடப் போனயா ?
ஒ... வெனக் கத்துகின்றனவே
கடலலைகள்...!
* * *
அழகானவளே...
நீ
உன்னை
அழகு படுத்திக்கொள்ளும்
ஒவ்வொரு
ஒப்பனை நாளிலும்
என் மனம்
அலங்கொலமாகிடுதே...!
* * *
மலரைப் படிக்கவந்த
வண்டாக
நான்
உன்னைப் படிக்க வந்தேன்
அந்தோ ...
ஒட்டிக்கொண்டேனே
உன்
காதல் பசையில்...!
* * *
Sunday, September 20, 2009
Saturday, September 19, 2009
Friday, September 18, 2009
காதல் கவிதைகள்
என்னை
மறந்து போகிறாயா?
போ...
போ...
தயவு செய்து
உன்
பாதப் பதிவுகளையாவது
பார்த்து வை
ஏனென்றால்
என்
உடலில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
இதயம்
உதிர்ந்து விழும்போலிருக்கிறது...!
* * *
உன் இதயத்தில்
ஒழிந்துகொண்டிருக்கிறேன்
நிர்வாணமாக ...
வெளியே பிடித்துத் தள்ளிவிடாதே
அவானமாக...!
* * *
ஒவ்வொரு அடியாக
உன்னைவிட்டு
நான்
முன்னே நடக்கிறேன்
என் உள்ளமோ
ஒவ்வொரு அடியாக
உன்னை நோக்கி
பின்னே போகிறது ...
கட்டுப்பாடுகள்
என்
கால்களைக் கட்டிக்கொண்டு
கதறுகின்றன
"வேண்டம் " என்று...
உள்ளமோ
பிடிவாதமாக
ஓடுகின்றது
" உன்னோடுதான் ஒட்டிக்கொள்வேன் " என்று ...!
மறந்து போகிறாயா?
போ...
போ...
தயவு செய்து
உன்
பாதப் பதிவுகளையாவது
பார்த்து வை
ஏனென்றால்
என்
உடலில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
இதயம்
உதிர்ந்து விழும்போலிருக்கிறது...!
* * *
உன் இதயத்தில்
ஒழிந்துகொண்டிருக்கிறேன்
நிர்வாணமாக ...
வெளியே பிடித்துத் தள்ளிவிடாதே
அவானமாக...!
* * *
ஒவ்வொரு அடியாக
உன்னைவிட்டு
நான்
முன்னே நடக்கிறேன்
என் உள்ளமோ
ஒவ்வொரு அடியாக
உன்னை நோக்கி
பின்னே போகிறது ...
கட்டுப்பாடுகள்
என்
கால்களைக் கட்டிக்கொண்டு
கதறுகின்றன
"வேண்டம் " என்று...
உள்ளமோ
பிடிவாதமாக
ஓடுகின்றது
" உன்னோடுதான் ஒட்டிக்கொள்வேன் " என்று ...!
Subscribe to:
Posts (Atom)