Saturday, September 20, 2014

புகழ்முடி தமிழேந்த வாழ்கிறாய்

வன்னியில் விளையாடி தந்தை சென்னியை அணைத்தாடி 
வளர்ந்தனை செல்வ மகனே… – உந்தன்
பொன்னுடல் தரைசாய புகழ்முடி தமிழேந்த வாழ்கிறாய் 
மன்னவன் ஈன்ற மகனே…

தென்னவர் புகழ்பாட தேன்தமிழ் உறவாட உதித்திடும் தமிழீழமே – அன்று
சின்னவர் பெரியவர் அனைவரின் விழியாட  
உருவாகும் சிலையொன்று உனக்காகவே ! தம்பி உனக்காகவே !


 (மாவீரன் பிரபாகரனின் புதல்வனுக்கய் தீட்டிய கவிதை)

Thursday, September 18, 2014

சோர்ந்து விடாதே...  நீயும்  சோர்ந்து  விடாதே...



துன்பம்  இன்று   வந்த  தென்றே

   சோர்ந்து  விடாதே

துணைக்கு  ஆளைச்  சேர்த்துக்  கொண்டே

    ஓடி விடாதே

அன்பு  பாசம்  அத்த னையும்

      இழந்து விட்டாலும்

அடுத்து  வரும்  வெற்றி  உன்னை

       அணைத்துக்  கொள்ளுமே !