Friday, September 18, 2009

காதல் கவிதைகள்

என்னை
மறந்து போகிறாயா?
போ...
போ...
தயவு செய்து
உன்
பாதப் பதிவுகளையாவது
பார்த்து வை
ஏனென்றால்
என்
உடலில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
இதயம்
உதிர்ந்து விழும்போலிருக்கிறது...!

* * *

உன் இதயத்தில்
ஒழிந்துகொண்டிருக்கிறேன்
நிர்வாணமாக ...
வெளியே பிடித்துத் தள்ளிவிடாதே
அவானமாக...!

* * *

ஒவ்வொரு அடியாக
உன்னைவிட்டு
நான்
முன்னே நடக்கிறேன்
என் உள்ளமோ
ஒவ்வொரு அடியாக
உன்னை நோக்கி
பின்னே போகிறது ...

கட்டுப்பாடுகள்
என்
கால்களைக் கட்டிக்கொண்டு
கதறுகின்றன
"வேண்டம் " என்று...

உள்ளமோ
பிடிவாதமாக
ஓடுகின்றது
" உன்னோடுதான் ஒட்டிக்கொள்வேன் " என்று ...!

2 comments:

  1. wot a wonderful poem....really nice!!! i hope that u will display more poems....soon thank you!!!

    ReplyDelete
  2. wow....im amazed.. wot a imagination!!!! hats off...if anybody read this poem sure they will fall in love...really interesting..im happy to join this blog thanks....

    ReplyDelete